search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடசென்னை அனல் மின்நிலையம்"

    வட சென்னை அனல்மின் நிலையத்தில் இரண்டாவது நிலை 2-வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின்நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. இதில் உள்ள ஐந்து அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

    இந்நிலையில் அனல்மின் நிலையத்தில் இரண்டாவது நிலை 2-வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மிகை மின் உற்பத்தி காரணமாக 2-வது அலகில் பணிகளை நிறுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திபட்டுபுதுநகர் வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரமும், 2-வது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் முதல்நிலை மூன்றாம் அலகில் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    2-வது நிலை இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் என மொத்தம் 810 மெகாவாட் நிறுத்தபட்டுள்ளன. பழுதினை சரிசெய்யும் பணியில் மின் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் உற்பத்தி தொடங்கப்படும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் வேலையை விட்டு நீக்கியதால் 60 அடி உயர டவரில் ஏறி ஊழியர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்தவர் தனசேகர். நிலக்கரி கையாளும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதில் கலந்து கொண்டதற்காக ஊழியர் தனசேகர் மற்றும் ஒருவரை ஒப்பந்த நிறுவனம் வேலையை விட்டு நிறுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் தனசேகர் இன்று காலை 7 மணிக்கு அனல்மின் நிலையத்துக்கு வந்தார்.

    அப்போது ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகர், நிலக்கரி கன்வேர் பெல்ட் உள்ள சுமார் 60 அடி உயர டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

    பணியில் மீண்டும் சேர்க்க வேண்டும், பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வர வேண்டும் என்று தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுபற்றி மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தனசேகரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் காலை 10 மணியளவில் அவர் கீழே இறங்கினார். இதனால் அனல்மின் நிலைய பகுதி சுமார் 3 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    இதற்கிடையே தனசேகருக்கு ஆதரவாக மேலும் 4 ஒப்பந்த ஊழியர்கள் டவரில் ஏற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கீழே இறங்கச் செய்தனர்.
    வல்லூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. #ThermalPowerStation

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இரண் டாவது அலகில் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதல் மற்றும் மூன்றாம் அலகில் மட்டும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். #ThermalPowerStation

    வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. #ThermalPowerStation

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திபட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. இதில் ஐந்து அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகா வாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இரண்டாவது நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

    முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் 1230 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் நடை பெறுகிறது. கொதிகலன் குழாய் பழுதினை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் உற்பத்தி தொடங்கப்படும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். #ThermalPowerStation

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 810 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது.

    இரண்டு நிலைகளில் உள்ள 5 அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் 2-வது நிலை இரண்டாம் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதேபோல் முதல் நிலை இரண்டாவது அலகில் பராமரிப்பு பணிக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருக்கிறது. கொதிகலன் குழாய் பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முதல்நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று 210 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்தது. இன்று காலை பழுது செய்யப்பட்டு அந்த அலகில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதையடுத்து அனல்மின் நிலையத்தில் மொத்தம் 1020 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடர்ந்து நடக்கிறது.
    வடசென்னை அனல் மின்நிலையத்தில் முதல் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வட சென்னை அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு இரண்டு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் நிலையில் மூன்று அலகுகளிலும் தலா 210 முதல் 630 மெகாவாட்டும், இரண்டாம் நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் முதல் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 210 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட பகுதியை மின் ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    ×